சாதாரணமான ஒரு நாளைச் சாகசங்கள் நிறைந்த நாளாக மாற்றும் வல்லமை என் இளைய மகளின் சில அறிவிப்புகளுக்கு உண்டு. அப்படித்தான் சென்ற வார வியாழக்கிழமை மாலை, ‘அம்மா, ஞாயிற்றுக்கிழமை ஆறுவிதமான இலைகளைக் கொண்டு வரணும்னு டீச்சர் சொல்லி இருக்காங்க’ என்று ஓர் அறிவிப்பை வெளியிட்டாள். அதோடு என் வாரயிறுதி...
Author - சிவசங்கரி வசந்த்
![]()
‘ஹாரி பாட்டர் அண்ட் தி காப்லெட் ஆஃப் ஃபயர்’ புத்தகத்தில் ஒரு காட்சி வரும். நான் புத்தகம் என்று குறிப்பிட்டிருக்கிறேன். திரைப்படத்தை அல்ல. கட்டுரையைப் படித்துவிட்டு அந்தக் காட்சியைத் திரைப்படத்தில் தேடாதீர்கள். கிடைக்காது. ஒரு நாவலைத் திரைப்படமாக எடுப்பதற்கென்று ஒரு ஃபார்முலா இருக்கிறது...
நோபல் பரிசும் ஆஸ்கர் பரிசும் வாங்கும் அளவுக்கு என்னிடம் ஏராளமான திறமைகள் கொட்டிக் கிடந்தாலும், என் பயணங்களுக்கு மிகவும் அவசியமான அந்த ஒரு ‘மகா வித்தை’ மட்டும் என்னிடம் இல்லையே என்ற கவலை ஒருநாள் வந்தது. அப்படியே கவலைப்பட்டுக்கொண்டு சும்மா இருப்பது என் ரேஞ்சுக்கு அழகல்ல என்று முடிவு...
நாங்கள் அபுதாபியிலிருந்து ஓமானுக்குக் குடிபெயர வேண்டும் என்ற நிலை வந்தபோது, எங்களுடைய பொருட்களை நாடு கடத்துவதற்குச் சிறப்பான திட்டங்கள் பலவற்றை வகுத்தேன். ஒரு ராணுவ நடவடிக்கையின் துல்லியத்துடன் அபுதாபியிலிருந்து ஓமானுக்கு எங்கள் குடிபெயர்வைத் திட்டமிட்டேன். ‘திட்டமிடல் திலகம்’ என்று...
‘என்னத்த பெருசா படிச்சுக் கிழிக்கப் போறீங்க நீங்களெல்லாம்… படிப்பை விட திறமைதான் முக்கியம். அது இருக்கான்னு பாருங்க!’ எங்கள் தெருவில் வசித்து வந்த ஒரு பாட்டி, பள்ளிக்கூடத்துக்குப் போகும் பிள்ளைகளைப் பார்க்கும் போதெல்லாம் இப்படிச் சொல்வது வழக்கம். ‘பாவம்… அவளுக்குப்...
‘பெண்களுக்காகச் சிங்கப் பெண் சிறப்புப் படை உருவாக்கப்பட்டுள்ளது’ என்னும் இந்த வாரப் பரபரப்புச் செய்தியைப் பார்த்தபோது எனக்குள், ‘பெண்களை ஏன் சிங்கத்தோடு ஒப்பிடுகிறார்கள்?’ என்ற அறிவார்ந்த கேள்வி எழுந்தது. அந்தக் கேள்வியோடு சில கிளைக் கேள்விகளும் வரிசையாக வந்தன. இந்த...
வெயில் காலம் என்பது நம்ம ஊரில் ஒரு சீசன் மட்டுமே. ஆனால் அரபு நாடுகளில் வாழ்வோருக்கு அது சீசன் அல்ல. வீட்டில் நிரந்தரமாகத் தங்கி இருக்கும் ஓர் உபத்திரவ உறவினர். வம்பு செய்யும் உறவினரானாலும் வீட்டுக்குள் வரும் போது எப்படி வருவார்? வாய் நிறையப் புன்னகை, கை நிறைய பலகாரம், ‘உங்களுக்கு ஏதாவது உதவி...
பிப்ரவரி இருபத்தி எட்டாம் தேதி மதியம் வரை இஃப்தார் நிகழ்வுகளைப் பற்றியும், போக்குவரத்து நெரிசலைப் பற்றியும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்த ஐக்கிய அரபு அமீரகம், அன்றைய மாலைப் பொழுதில் மெல்லிய பதற்றத்துக்குள்ளானது. அன்று காலையில் யாராவது ஜோசியர் ‘அடுத்த முப்பது நாட்களில் அமீரகவாசிகளின்...
இந்தக் காலகட்டம் இந்திய மக்களிடையே கிளர்ச்சி, அடக்குமுறை, சீர்திருத்தம் என்ற மூன்று முக்கிய மாற்றங்களை ஏற்படுத்திய, இந்தியச் சுதந்தரப் போராட்ட வரலாற்றின் முதல் விதையான சிப்பாய்ப் புரட்சி நிகழ்ந்த தசாப்தம். 1857ஆம் ஆண்டில் உருவான சிப்பாய்க் கலகம்தான் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான முதல் பெரிய எழுச்சி...
சூடான எண்ணெய்யில் ஒரு கைப்பிடி காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டால் சட்டென்று சமையலறை முழுக்க ஒரு கார நெடி பரவுமே, அதை விடவும் வேகமாக அந்தச் செய்தி பரபரப்பாகப் பரவியது. ‘இந்தியாவில் சமையல் எரிவாயு பற்றாக்குறை!’ சில நிமிடங்களில் அந்தச் செய்தியின் பின்னணி இசை போல இன்னொரு செய்தி வந்தது...














