Home » நாள்தோறும் » Page 55

Tag - நாள்தோறும்

சலம் நாள்தோறும்

சலம் – 6

6. நாக பந்தம் சிகரத்தை அடைந்தபோது முதலில் எழுந்த உணர்ச்சி, திகைப்புத்தான். மறுபுறம் என்ற ஒன்று இல்லாத மிகப்பரந்த சமவெளியாக அது இருந்தது. நாங்கள் வசிக்கும் கானகத்தின் அடர்த்தியினும் பல மடங்கு இதன் அடர்த்தி பெரிதாகவும் தோன்றியது. எங்கெங்கும் வானை அளாவிய குங்கிலிய மரங்கள் அரண் போலப் பரவிக் கிடந்தன...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 6

6. குதிரை வண்டி எதற்கு? கொல்கத்தாவில் கோகலேவுடன் தங்கியிருந்த காந்தி எந்நேரமும் தன்னுடைய அரசியல் குருநாதரைப் பார்த்து வியந்துகொண்டும் பாடம் கற்றுக்கொண்டும் இருக்கவில்லை. அங்கு அவருக்கு ஏகப்பட்ட வேலைகள் இருந்தன. உள்ளூரிலும் வெளியூரிலும் பலரைச் சந்தித்துப் பேசவும் தன்னுடைய குழப்பங்களுக்குத் தெளிவு...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 5

5. கூச்சம் கூடாது 1901ம் ஆண்டுக் காங்கிரஸ் மாநாடு வங்காளத்திலுள்ள கொல்கத்தா நகரில் நடைபெற்றது. மும்பையைச் சேர்ந்த வணிகரும் அரசியல் தலைவருமான சர் தின்ஷா எடுல்ஜி வாச்சா இதற்குத் தலைமை வகித்தார். அப்போது காந்தி இந்தியாவுக்கு வந்திருந்தார், அதனால், இந்த மாநாட்டில் கலந்துகொண்டார். அவருடைய முதல்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 5

5. கருஞ்சிவப்புக் கல் பைசாசக் குன்றின் அடிவாரத்தில் இருந்தேன். இந்தத் தொலைவை என்னால் தோராயமாகக் கூடக் கணக்கிட முடியவில்லை. நெடு நாள் – நெடுந்தொலைவு என்பதற்கு அப்பால் ஒன்றுமே தோன்றவில்லை. இந்நாள்களில் ஒன்றை மட்டும்தான் என்னால் சரியாகக் கவனிக்க முடிந்தது. சர்சுதியின் அடர்த்தி. உருத்திர மலையின்...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 4

4. ரானடேவின் மாணவர் 1885ம் ஆண்டு, பத்தொன்பது வயதான கோபால கிருஷ்ண கோகலே முதன்முறையாக மேடையேறினார். ‘பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் இந்தியா’ என்ற தலைப்பில் அவர் நிகழ்த்திய அந்தச் சொற்பொழிவு அவருடைய ஆங்கில மொழி வல்லமைக்காகவும் தகவல்களை எடுத்துரைத்த திறமைக்காகவும் மிகுந்த பாராட்டுகளை...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 4

4. தோன்றாத் துணை நீ என்னைத் தொட்டாயா என்று கேட்டேன். அவள் பதில் சொல்லவில்லை. சிறிது நேரம் காத்திருந்துவிட்டு மீண்டும் கேட்டேன். ‘இல்லை சகோதரனே’ என்று கன்னுலா சொன்னாள். ‘அப்படியா? என் உச்சந்தலையில் ஓர் உள்ளங்கை படிந்து மீண்டது. கணப் பொழுதுதான் இருக்கும். ஆனால் கரம் பட்டதை உணர்ந்தேன். பிரமையல்ல.’...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 3

3. தேவி நண்பகல் வரை நிற்காமல் நடந்துகொண்டிருந்தேன். வழியில் சில காட்டுக்குடிகளைக் கடக்கவேண்டியிருந்தபோது, தென்பட்ட மூப்பர்களிடம் சந்தேகம் எழாதவண்ணம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தேன். அவன் பெயரைக்கூட யாரும் அறிந்திருக்கவில்லை. அதுவல்ல விஷயம். ஒரு பிராமணனைக் குறித்து நான் விசாரிப்பதையே அவர்கள் யாராலும்...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 3

3. கல்வி என்னும் கனவு காந்தியை நாம் மகாத்மா என்கிறோம். நாம்மட்டுமில்லை, பெரிய தலைவர்கள், சிந்தனையாளர்களில் தொடங்கிப் பொதுமக்கள்வரை பலரும் அவரை அவ்வாறு உணர்ந்து அழைத்துள்ளார்கள். இன்றைக்கும் ‘மகாத்மா’ என்றால் நம் மனத்தில் தோன்றும் உருவம் காந்தியுடையதுதான். ஆனால், காந்தியின் இந்தப் பட்டம்...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 2

2. அணைத்துக்கொண்ட கங்கை 1896ம் ஆண்டு, தென்னாப்பிரிக்காவில் குடியேறியிருந்த இந்தியர்களுடைய உரிமைகளுக்காகப் போராடிக்கொண்டிருந்த காந்தி, அந்தப் போராட்டத்துக்கென இந்தியாவிலுள்ள மக்களுடைய ஆதரவைத் திரட்ட விரும்பினார். அதற்காக, இந்தியாவுக்கு வந்தார், இங்கு கல்கத்தா (இன்றைய கொல்கத்தா), பம்பாய் (மும்பை)...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 2

2. பாதம் தொட்டவன் அவன் தன்னை துவன்யன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டான். ஏழு-ஏழரை அடி உயரமும் மணலின் நிறமும் கட்டுறுதி மிக்க உடலும் கொண்டவனாக இருந்தான். கண்ணுக்குக் கண் பார்த்தபோது மரியாதையுடன் புன்னகை செய்தான். ‘அந்நியனே, நீ யாராக வேண்டுமானாலும் இரு. ஆனால் இப்படி நீருக்கடியில் அமர்ந்துகொண்டு காலைப்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!