Home » அண்டார்டிகாவின் அதிசய மர்மம்
இயற்கை

அண்டார்டிகாவின் அதிசய மர்மம்

அண்டார்டிகாவின் ‘டெய்லர் பனிப்பாறையில்’ (Taylor Glacier) நின்று கொண்டிருப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். சுற்றிலும் கண்ணைப் பறிக்கும் வெண் பனிப்பரப்பு. உங்கள் மூச்சுக்காற்று கூட உறைந்து போகும் கடுங்குளிர். இந்த அமைதியான, உயிரற்றதாகத் தோன்றும் சூழலில், பனிப்பாறையின் பிளவிலிருந்து அடர் சிவப்பு நிறத்தில் ஒரு நீர்வீழ்ச்சி கொட்டினால் எப்படியிருக்கும்? காண்பவரை அதிர்ச்சியில் ஆழ்த்தும் அந்த வினோதக் காட்சிதான், கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக அறிவியலாளர்களை வியப்பிலும் மர்மத்திலும் ஆழ்த்தியுள்ள ‘ரத்த நீர்வீழ்ச்சி’ (Blood Falls).

1911ஆம் ஆண்டு, ஆஸ்திரேலியப் புவியியலாளர் கிரிஃபித் டெய்லர் முதன்முதலில் இந்த இடத்தைக் கண்டறிந்தபோது கடும் அதிர்ச்சிக்குள்ளானார். பனிப்பாறையில் இருந்து வழியும் அந்தச் சிவப்பு நிறம், ஒருவகை அரிய பாசிகளால் (Red Algae) ஏற்படுவதாக அவர் கருதினார். உலகமும் நீண்டகாலம் இதை அப்படியே நம்பியது. ஆனால், இது இயற்கையின் நுணுக்கமான ஒரு வேதிவினையின் விளைவு என்பது பிற்காலத்தில் வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த நீர்வீழ்ச்சிக்குப் பின்னால் ஒரு பெரும் மர்மம் ஒளிந்திருக்கிறது. சுமார் 400 மீட்டர் தடிமனான பனிக்கு அடியில், கடந்த 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக உலகத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் ஒரு ஏரி சிறைப்பட்டிருக்கிறது. இது கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு சிறைப்பட்ட கடல் நீரின் ஒருபகுதி. இது கடல் நீரை விட அதிக உப்புத்தன்மை கொண்ட ‘பிரைன்’ (Brine) எனப்படும் நீராகும். இதன் அதீத உப்புத்தன்மையால் கடும் குளிரிலும் இந்த நீர் உறைந்து போகாமல் திரவமாகவே இருக்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!