‘என்னத்த பெருசா படிச்சுக் கிழிக்கப் போறீங்க நீங்களெல்லாம்… படிப்பை விட திறமைதான் முக்கியம். அது இருக்கான்னு பாருங்க!’
எங்கள் தெருவில் வசித்து வந்த ஒரு பாட்டி, பள்ளிக்கூடத்துக்குப் போகும் பிள்ளைகளைப் பார்க்கும் போதெல்லாம் இப்படிச் சொல்வது வழக்கம்.
‘பாவம்… அவளுக்குப் பள்ளிக்கூடம் போய் படிக்க முடியலையேன்னு ஆதங்கம். அதனாலதான் இப்படிப் பேசறா, கண்டுக்காதீங்க’ என்பார் என் பாட்டி.
ஆனால், கடந்த வாரம் நான் பார்த்த ஒரு வேலைவாய்ப்பு விளம்பரம், அந்தப் பாட்டி எதிர்காலத்தை முன்கூட்டியே பார்த்த தீர்க்கதரிசி என்பதை எனக்குப் புரிய வைத்தது. வேலைவாய்ப்பு உலகம் எந்தத் திசையில் போகிறது என்பதை அவர் பல வருடங்களுக்கு முன்பே சொல்லியிருக்கிறார். அப்போது புரியாதது இப்போதுதான் புரிகிறது.
















Add Comment