இந்தியத் திரையுலகின் தவிர்க்க இயலாத ஒரு குரல் தன்னுடைய சப்தத்தை நிறுத்திக் கொண்டது. திரையுலகின் இசை மகாராணி ஆஷா போஸ்லே (92), உடல்நிலை சரியில்லாமல் மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 12 ஞாயிறன்று மதியம் பன்னிரண்டு மணிக்கு மரணமடைந்தார்.
மறைந்த ஆஷாவுக்கு திங்களன்று அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், பாடகர்கள் திரளாக வந்து இறுதி மரியாதை செலுத்தினர்.
எழுபத்து இரண்டு வருடங்கள். இருபது மொழிகள். பன்னிரண்டாயிரம் பாடல்கள் எனத் தன்னுடைய பாடல்களால் மக்களை வசீகரித்த இசையரசி ஆஷா போஸ்லே. 1933 செப்டம்பர் எட்டாம் தேதி மகாராஷ்ட்ராவின் சாங்க்லி என்ற ஊரில் பிறந்தார்.















Add Comment