அவர் யார் என்று தெரியாது. அவரது பெயர் தெரியாது. அவரது மொழி தெரியாது. அம்முதிய பெண்மணி தரையில் அமர்ந்து ஒரு கல்லைத் தொட்டுக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார். அக்காட்சியைப் பார்த்த எங்களால் அவரைக் கடந்து செல்ல முடியவில்லை. அம்முதியவர் அமர்ந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த இடம் துபாய் எக்ஸ்போ...
Author - சிவசங்கரி வசந்த்
![]()
‘புலி வருது, புலி வருது’ என்று பொய்யாகப் பயமுறுத்திய பையனின் கதை நம் எல்லோருக்கும் தெரியும். அதுபோலவே ‘புலி ஜெயிக்கப் போகிறது, புலி ஜெயிக்கப் போகிறது’ என்ற கதையை வருடா வருடம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இதுவரை புலி ஜெயித்தபாடில்லை. பாண்டா (Panda) தான் தொடர்ந்து ஜெயித்து வருகிறது. பாண்டா...
இம்மாதத் தொடக்கத்தில் கொரோனாவை விட அதிதீவிரமான ஒரு வைரஸை சீனாவில் உற்பத்தி செய்திருக்கிறார்கள். அந்த வைரஸைக் கண்டு மேலை நாட்டு மக்களுக்கு எந்த பயமும் இல்லை. சீனர்கள் பாம்பைத் தலை முதல் வால் வரை பார்ட் பார்ட்டாகச் சமைத்துச் சாப்பிடுவது போல அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் இந்த வைரஸை வைத்து விதவிதமான...
பதினொரு ஆண்டுகளுக்கு முன்பு ஓர் ஏப்ரல் மாதத்தில் நான் அபுதாபிக்குக் குடிபெயர்ந்தேன். நல்ல கத்திரி வெயிலின் வெப்பம் தெரிந்தது. நமக்கெல்லாம் கத்திரி வெயில் ஆரம்பம் என்று பேப்பரில் பார்த்த உடன் வத்தலும் வடகமும் தான் நினைவிற்கு வரும். மழைநீர் வீணாகும் போது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். அவ்வளவுதான். ஆனால்...
எனக்கு ஒரு தோழி இருக்கிறாள். அவளிடம் உங்கள் வீட்டுக் குளிர் சாதனப் பெட்டி பற்றிய தகவல்களை மட்டும் சொன்னால் போதும். உங்கள் கணவர் எப்படிப்பட்டவர் என்பதைக் கட்டம் போட்டுக் காட்டி விடுவாள். எத்தனை கதவுகள் கொண்ட குளிர் சாதனப் பெட்டி என்பதை வைத்து தான் கணவரது மனம் எத்தனை விசாலமானது என்பதை தீர்மானிப்பாள்...
உண்மை என்பதொரு தயிர் சாதம். யார் வேண்டுமானாலும் எளிதாகச் சமைத்து விடலாம். எந்தவித முயற்சியும் பயிற்சியும் தேவையில்லை. ஆனால் பொய் என்பது பிரியாணி மாதிரி. சரியான மசாலாக்களை சரியான விகிதத்தில் சரியாக நேரத்தில் சேர்த்தால்தான் சுவையான பிரியாணி கிடைக்கும். தெருவுக்கு ஒரு பிரியாணி மாஸ்டர் இருப்பதை நீங்கள்...
நமசிவாய வாழ்க. நாதன்தாள் வாழ்க. இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க. கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க. ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க. ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க. ‘நமசிவாய’ என்னும் ஐந்தெழுத்து மந்திரம் வாழ்க. அந்த ஐந்தெழுத்தின் வடிவாக இருக்கும் இறைவனது திருவடி வாழ்க. இமைக்கும் நேரம்...
அவர் அனுமதியின்றி அவர் பெயரை உபயோகிப்பது என்பதும், அவர் சொன்னதாகப் பல பொய் தகவல்களைப் பரப்புவதும் புதிய விஷயங்களா என்ன? இதெல்லாம் தலைமுறை தலைமுறையாக நம் வீடுகளில் நிகழ்ந்து வரும் புராதன விஷயம் தானே..? பெண்களுக்குக் கை வரும் ஏழு கலைகளில் முக்கியமான மூன்றாவது கலையே இதுதான். மற்ற ஆறு கலைகளைப் பற்றி...
முறையான முதலீட்டுத் திட்டம் என்பதைத்தான் சிஸ்டேமடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) என்று கூறுகிறார்கள். ஆனால் நம் மனத்தில் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) என்றதும் பங்குச்சந்தை பரஸ்பர நிதித் (Mutual fund) திட்டத்தில் முதலீடு செய்வது என்ற எண்ணம்தான் மேலோங்கி நிற்கிறது. நாம் முறையாகத் தொடர்ந்து...
பொங்கலுக்கு மாக்கோலம் போடுவது ஒரு கலை. முதலில் அரிசியை ஊறவைத்து, ஆட்டுக் கல்லில் நன்றாக அரைத்து, அளவாகத் தண்ணீர் சேர்த்து பதமாகக் கரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு கணவரது புது வெள்ளை வேஷ்டியை எடுத்துச் சரியாக நாலுக்கு நாலு இஞ்ச் அளவில் நான்கைந்து துணிகளை வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அரிசி...














