இந்தியாவில் முதல் முறையாக, 2026 ஜூலை 17 அன்று ஹரியானாவில் உள்ள ஜிந்த்-சோனிபட் இடையே ஹைட்ரஜன் ரயில் (Hydrogen train) சேவை தொடங்கி வைக்கப்பட்டது. இந்த இரு ரயில் நிலையங்களுக்கிடையிலான 89 கிமீ தூரத்தை இந்த ஹைட்ரஜன் ரயில் இரண்டு மணிநேரத்தில் சென்றடைகிறது.
ஹைட்ரஜனில் ஓடும் ரயில்கள் முதன்முதலில் ஜெர்மனியில் 2018ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன. ஜெர்மனி, ஜப்பான், சீனா, அமெரிக்கா போன்ற சில நாடுகளில் மட்டுமே இவ்வகை ரயில் சேவைகள் உள்ளன.
இந்திய நாட்டின் முதன்மையான போக்குவரத்து அமைப்பான இந்திய ரயில்வே துறை, ஆசியாவிலேயே மிகப்பெரியது மட்டுமல்லாது, ஒரே நிர்வாகத்தின் கீழ் இயங்கும் உலகின் இரண்டாவது பெரிய ரயில் கட்டமைப்பாகும். இந்திய ரயில்வே மூலம் ஆண்டுக்குச் சுமார் 500 கோடி மக்கள் பயணிக்கின்றனர். 35 கோடி டன் சரக்குகள் கையாளப்படுகின்றன; 12.54 லட்சம் பணியாளர்கள் இதில் பணிபுரிகின்றனர். இந்தியாவிலுள்ள இருப்புப் பாதைகளின் மொத்த நீளம் 67,956 கிமீ. நாள்தோறும் 14,444 ரயில்கள் இயக்கப்படுகின்றன.
















Add Comment