நெல்லை-தென்காசி மாவட்டங்களின் எல்லையில் உள்ள ஒரு அமைதியான கிராமத்தில், பூமிக்கு அடியில் பல ஆண்டுகளாக உறங்கிக் கொண்டிருந்த மாபெரும் வரலாற்றுப் பேரதிசயம் இப்போது மெல்லக் கண்விழிக்கத் தொடங்கியிருக்கிறது.
அது இன்று நாம் பயன்படுத்தும் நவீனத் தொழில்நுட்பங்கள் எதுவுமே இல்லாத ஒரு காலம். ஆனால் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே இந்த மண்ணுக்குச் சர்வதேச வணிகர்கள் வந்து போயிருக்கிறார்கள். ரோமானியப் பேரரசின் தங்கம் புழங்கியிருக்கிறது. இரும்பு உருக்கு ஆலைகள் இரவிலும் தகித்துக் கொண்டு இருந்திருக்கின்றன. இந்த ஊரின் பெயர் கரிவலம்வந்தநல்லூர்.
2026 மார்ச் மாதத்தில் மத்திய அரசு அனுமதி அளித்த எட்டு முக்கிய அகழாய்வுத் தளங்களில் ஒன்றுதான் தென்காசியில் உள்ள கரிவலம்வந்தநல்லூர். வைகை நதிக்கரையில், உலகையே வியக்க வைத்த கீழடி அகழ்வாராய்ச்சித் தளத்தில் இருந்து சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
















Add Comment