215. பற்றிக் கொண்ட பஞ்சாப்
இந்திய அரசியல் களம் என்பது எப்படி இருக்கும் என்பது குறித்த யதார்த்தமான புரிதல் இல்லாமல் காங்கிரஸ் கட்சிக்குள் வந்திருக்கிறோம் என்பதை ராஜீவ் காந்தி சில நாட்களிலேயே புரிந்து கொண்டார்.
போதாக்குறைக்கு, கட்சிக்குள்ளே இருக்கும் சிக்கல்களைத் தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பும் இவர் தலையில் விழுந்துவிட்டது. இந்தப் பிரச்சினைகளை எல்லாம் எப்படித் தீர்த்து வைப்பது என்று ராஜீவ் காந்தியின் மண்டை குடைந்தது.
இந்திரா காந்தியிடம் இது குறித்து ஆலோசனை செய்தார்.
இந்திரா காந்தியும், ‘கட்சியின் குளறுபடிகளைச் சரிசெய்தே தீர வேண்டிய தருணம் வந்துவிட்டது’ என்றார்.
‘உடனடியாகக் கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தாக வேண்டும். கட்சிக்குள்ளே எதிர்ப்புக் குரல் எழுப்பி கலகம் ஏற்படுத்துபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; முதலமைச்சர்கள், மாநில அளவிலான கட்சித் தலைவர்கள் ஆகியோர் குறுநில மன்னர்கள் போலத் தடாலடியாக இயங்குவதற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என்று சொன்னார் இந்திரா காந்தி.
அம்மா சொன்னதை அமைதியாகக் கேட்டுக் கொண்ட ராஜீவ் காந்தி, அடுத்து தன் மனதில் இருந்த மூன்று முக்கிய கருத்துகளை எடுத்துக் கூறினார்.
















Add Comment