திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் தருமி பகுதி சுவையானது. பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு என்ற இறையனாரின் கூற்றை மறுப்பார் நக்கீரர். ‘பாக்களை இயற்ற உமது நாக்கினிலிருந்து உதவுகிறாளே பாரதி, அவளுக்கும் அதே நிலைதானோ?’ என்று மடக்குவார் இறையனார். ‘கலைமகள் என்ன? மலைமகளுக்கும் அதே விதிப்படிதான்’ என்று ஒரே போடாகப் போடுவார் நக்கீரர்.
பொய்களைக் கண்டுபிடிக்கச் சராசரி மனிதர்களால் முடியாது. பெற்றோரால் முடியாது. வாழ்க்கைத்துணைவராலும் முடியாது. சரி, போகட்டும். குற்றவாளிகளுடனே புழங்கித் திரியும் போலிசார், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், உளவியலாளர்கள் இவர்களால் முடியுமா என்றால் நக்கீரரைப் போலத்தான் பதில் சொல்லவேண்டியிருக்கிறது. ‘ஒருக்காலும் முடியாது’.
இதை நான் சொல்லவில்லை, பல்வேறு ஆய்வுகள் சொல்கின்றன. பேராசிரியர்கள் கிராட்டும் போவும் சேர்ந்து நடத்திய விரிவான ஆய்வின்படி, பொய்யறிவதில் அமெரிக்கச் சுங்கத்துறை அதிகாரிகள் கல்லூரி மாணவர்களைவிட மோசமாக உள்ளனர்.
















Add Comment