வரிசை வரிசையாக நிற்கப் போகிறோம் என்று சத்தியமாக யாருமே எதிர்வுகூறவில்லை. இந்த வருடத்தின் ஆரம்பம் எனக்கு அமோகமாகத்தான் இருந்தது. எண்ணற்ற பிரார்த்தனைகளால் சூழப்பட்டிருந்த ஆறு வயது மகன் பூரண சுகம் பெற்று வெளி உலகைத் தரிசித்த நல்வருடம் இது. மஹரகம புற்று நோய் வைத்தியசாலையும் கையுமாக ஓடிக்கொண்டிருந்த எங்கள் வாழ்க்கை ஒரு வழியாக வழமைக்குத் திரும்பியது. மூன்று வயது ஏறியதைத் தவிர, பெரிதாக எதுவும் நிகழ்ந்திருக்கவில்லை வாழ்க்கையில்.
இதைப் படித்தீர்களா?
என் பெயர் அபுது. நானொரு சோனகன். இதுதானே உன் ஐயம்? ஆனால் தெரிந்துகொள். உனக்கு உன் சிந்தை போதும் என்பது போல எனக்கு என் உருவற்ற இறைவன் போதும்.
சித்தனே, கடவுளை ஏன் படைத்தீர்கள் என்று நான் கேட்க மாட்டேன். யாருக்காவது, எதற்காவது அஞ்சியிருப்பது குற்றங்களைக் குறைக்குமென்று நானறிவேன்.















Add Comment