மலையாள சினிமாவின் மூத்த நடிகர், திரைக்கதையாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட ஸ்ரீனிவாசன், டிசம்பர் 20ஆம் தேதியன்று காலமானார்.
இருநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், தனது படைப்புகளுக்காகத் தேசிய விருதையும், கேரள அரசின் விருதுகளையும் பெற்றவர். தமிழில் புள்ளக்குட்டிக்காரன், லேசா லேசா உள்ளிட்ட படங்களில் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அறுபத்தொன்பது வயதான ஶ்ரீனிவாசன், உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்தார்.
‘அவர் நம்மை விட்டுப் போய்விட்டார் என்று சொல்லவே தோன்றவில்லை. இது போன்ற கலைஞர்கள் நம்மோடு என்றுமே மானசீகமாக வாழ்கிறார்கள். நாங்கள் இருவருமே மிகவும் கஷ்டப்பட்டு மேலே வந்தவர்கள். என்னுடைய வளர்ச்சியில் அவருடைய பங்கும் மறுக்க முடியாதது’ என்கிறார் அவருடைய மிக நெருங்கிய நண்பரும் நடிகருமான மோகன்லால்.















Add Comment