Home » உகாண்டா: வறட்சியிலிருந்து வளர்ச்சிக்கு
உலகம்

உகாண்டா: வறட்சியிலிருந்து வளர்ச்சிக்கு

கிழக்கு ஆப்பிரிக்காவின் நடுவே, வெறும் 24 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவே உள்ள சிறிய நாடு உகாண்டா. உலகின் மிகப்பெரிய வெப்பமண்டல ஏரியான விக்டோரியா ஏரியின் கரையை ஒட்டி அமைந்துள்ளது. ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் இங்கிலாந்தின் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் இந்நாட்டைப் பார்வையிட்டபோது, இதன் பசுமையான மலைச் சரிவுகள், நீரோடும் ஏரிகள், வளமான செம்மண் ஆகியவற்றைக் கண்டு வியந்து, ‘ஆப்பிரிக்காவின் முத்து’ என்று அழைத்தார். அந்தப் பெயர் இன்றளவும் நிலைத்திருக்கிறது.

கென்யா, தெற்கு சூடான், காங்கோ ஜனநாயகக் குடியரசு, ருவாண்டா, தான்சானியா ஆகிய ஐந்து நாடுகளுடன் எல்லையைப் பகிரும் உகாண்டா, சுமார் ஐந்து கோடி மக்கள்தொகையைக் கொண்டிருக்கிறது. தனித்துவமான மொழி, பண்பாடு, பாரம்பரியத்துடன் கூடிய ஐம்பதுக்கும் மேற்பட்ட இனக்குழுக்கள் உகாண்டாவில் வாழ்கின்றன.

நாட்டின் மக்கள்தொகையில் பெரும்பான்மையினர் இளைஞர்கள். நாட்டு மக்களின் சராசரி வயது வெறும் பதினாறு என்பது உகாண்டாவை உலகின் மிக இளைய மக்கள்தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆக்குகிறது. 1962இல் பிரித்தானிய ஆட்சியிலிருந்து சுதந்தரம் பெற்ற இந்நாடு, பின்னர் இடி அமீனின் கொடூர ஆட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டது. அந்த இருண்ட காலகட்டத்திலிருந்து மெல்ல மெல்ல மீண்டு, இன்று விவசாயம், சுற்றுலா ஆகியவற்றை மையமாகக் கொண்டு முன்னேறி வரும் ஒரு நாடாக அறியப்படுகிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!