2026 மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பல இடங்களில் தீவிர வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றில் நான்கு பேர் இறந்துள்ளனர், நூற்றுக்கும். மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பொது இடங்களும், வீடுகளும், கட்டடங்களும் சேதமடைந்துள்ளன.
இதன் உச்சகட்டமாக, பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு வங்கத் தலைவரும் முதல்வராகப் பதவியேற்றுள்ளவருமான சுவேந்து அதிகாரியின் தனிப்பட்ட உதவியாளர் சந்திரநாத் ரத் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்துக்குத் திரிணாமூல் காங்கிரஸை பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. இதை விசாரிக்க ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்காளத்தில் தேர்தலுக்குப் பிறகு வன்முறையும் மோதல்களும் நிகழ்வது வழக்கமானது. அதனால் சந்திரநாத் ரத்தின் கொலை முக்கியத்துவம் பெற்ற அளவுக்குச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான உடனே மேற்கு வங்கத்தில் அரங்கேறிய பிற வன்முறைகள் கவனம் பெறவில்லை.















Add Comment