Home » Archives for பா. ராகவன் » Page 24

Author - பா. ராகவன்

Avatar photo

சாத்தானின் கடவுள் தொடர்கள்

சாத்தானின் கடவுள் – 25

25. யாரால்? கடவுளைப் பற்றிய கண்டுபிடிப்பு முயற்சிகளில் ஈடுபட்டவர்கள் பொதுவாக ஒரே ஓர் அம்சம் தவிர மற்ற எதிலும் ஒத்துப் போக மாட்டார்கள். அந்த ஒத்துப் போகும் ஓரம்சம் – உருவமில்லை என்பது. உருவமில்லாத கடவுளுக்கு பிரம்மம் என்றும் அல்லா என்றும் தேவனென்றும் மதங்கள் தம் விருப்பப்படி பெயரிடுகின்றன...

Read More
சாத்தானின் கடவுள் தொடர்கள்

சாத்தானின் கடவுள் – 24

24. ஒளியிலே தெரிவது  வள்ளலார் 1823 ஆம் ஆண்டு பிறந்தவர். அவரது தாயார், அவரது தந்தைக்கு ஆறாவது மனைவி. முதல் ஐந்து பேரும் பிரசவ காலத்தில் இறந்திருக்கிறார்கள். அந்தக் கணக்கை நேர் செய்வது போல, ஆறாவதாக மணந்த பெண்ணுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்திருக்கின்றன. வள்ளலார், ஐந்தாவது. குழந்தை பிறந்த ஐந்தாம் மாதம்...

Read More
சாத்தானின் கடவுள் தொடர்கள்

சாத்தானின் கடவுள் – 23

23. தீயினிலே வளர் சோதி வள்ளலார் என்று நாமறிந்த ராமலிங்க அடிகளை ஒரு வகையில் எதிர் புத்தர் என்று சொல்ல இயலும். இருவரது தேடலின் வழிகள் வேறு வேறு என்றாலும் விளைவு ஒன்று. கண்டடைந்தது ஒன்று. இருவரும் பயன்படுத்திய கருவியும் ஒன்றே. அறிவின் துணை கொண்டு மட்டுமே தமது தேடலின் விளைவைப் பகுப்பாய்வு செய்தவர்கள்...

Read More
சாத்தானின் கடவுள் தொடர்கள்

சாத்தானின் கடவுள் – 22

22. பாதையும் பயணமும் நீங்கள் ஒன்றைக் கவனித்திருக்கலாம். இலங்கையில் எப்போதெல்லாம் தமிழர்கள் மீது சிங்கள அரசு கொடுந்தாக்குதலைக் கட்டவிழ்த்துவிடுகிறதோ அப்போதெல்லாம் இங்கே ஒரு விமரிசனம் வரும். பவுத்தத்தைப் பின்பற்றும் நாடும் மக்களும் இவ்வளவு ரத்த வெறி பிடித்து அலைவதைக் கவனியுங்கள் என்பார்கள். அல்...

Read More
சாத்தானின் கடவுள் தொடர்கள்

சாத்தானின் கடவுள் – 21

21. பற்று உடலையும் மனத்தையும் வசப்படுத்துவதன் மூலம் சித்தத்தை சிவத்தில் நிலைநிறுத்த வழி சொன்ன சித்தர்களைப் பற்றிப் பார்த்துக்கொண்டிருந்தோம். தவிர்க்க முடியாமல் இந்த இடத்தில் சித்தருக்கு எதிர்ப்பாதையில் சென்ற புத்தரைச் சிறிது கவனிக்க வேண்டியிருக்கிறது. கவனம். நாம் பவுத்தத்துக்குள் செல்லப் போவதில்லை...

Read More
சாத்தானின் கடவுள் தொடர்கள்

சாத்தானின் கடவுள் – 20

20. உயிர்த் தீயினிலே வளர் சோதி யோசித்துப் பார்த்தால், இரண்டு விஷயங்கள் சார்ந்த வியப்பு உலகமுள்ள வரை தீரவே தீராது. முதலாவது சுவாசிப்பது. இரண்டாவது உணவு தேடுவது. பசி என்ற உணர்ச்சி இருக்கும்வரைதான் உயிர்கள் எதையாவது செய்துகொண்டிருக்கும். அது இல்லை என்றாகிவிட்டால் ஒன்றும் செய்யவேண்டிய அவசியம் இருக்காது...

Read More
சாத்தானின் கடவுள் தொடர்கள்

சாத்தானின் கடவுள் – 19

19. மாற்று வழி ஜ.ரா. சுந்தரேசன் என்ற இயற்பெயரைக் கொண்ட பாக்கியம் ராமசாமி என்கிற நகைச்சுவை எழுத்தாளரை உங்களுக்குத் தெரிந்திருக்கும். படித்திருப்பீர்கள், குறைந்தபட்சம் கேள்விப்பட்டிருப்பீர்கள். குமுதம் வார இதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர். அவரது எழுத்துப் பாணி, அவர் எழுதுவதற்குத் தேர்ந்தெடுத்த...

Read More
சாத்தானின் கடவுள் தொடர்கள்

சாத்தானின் கடவுள் – 18

18. இல்லாத ஒன்றும் இருக்கும் இரண்டும் இந்த உலகில் கடவுளைக்கூடக் கொஞ்சம் மெனக்கெட்டுத் தேடினால் பார்த்துவிடலாம். ஆனால் சாமானிய மனிதர்களால் கண்டுபிடிக்கவே முடியாத ஒரு விவகாரம் உண்டு. அதற்கு ஆன்மா அல்லது ஆத்மா என்று பெயர். மனிதன் என்றால் ஜீவாத்மா. கடவுளென்றால் பரமாத்மா. அது இருந்துவிட்டுப் போகட்டும்...

Read More
சாத்தானின் கடவுள் தொடர்கள்

சாத்தானின் கடவுள் – 17

17. அகத்தியரும் சீர்காழி கோவிந்தராஜனும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட உரைநடையைப் படிப்பதற்கு நமக்குச் சிரமமாக இருக்கிறது. அன்று புழக்கத்தில் இருந்த பல சொற்களை இன்றைக்கு நாம் அறிய மாட்டோம். கிபி பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்து திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகரைப் படித்தறியத்...

Read More
சாத்தானின் கடவுள் தொடர்கள்

சாத்தானின் கடவுள் -16

16. பாம்பும் பறவையும் இப்போது உண்டா என்று தெரியாது. முன்னொரு காலத்தில் குழந்தைகளுக்குத் தரப்படும் மாத்திரைகளில் இனிப்பு தடவப்பட்டிருக்கும். கடித்தாலும் கசப்பின் அளவு குறைந்து, மருந்து உள்ளே சென்று நோய் நீங்க வேண்டும் என்பதற்காக. அப்படித்தான் மூலாதார உண்மைகளும் தத்துவங்களும் தெரியாமல் போய்விடக்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!