புவியில் மொத்தம் பதினான்கு சிகரங்கள்தான் 8,000 மீட்டர்களுக்கு மேல் உயரமாக உள்ளன. முதன்முதலாக இந்தப் பதினான்கிலும் ஏறிய இத்தாலியைச் சேர்ந்த மலையேற்ற வீரர், இந்தச் சாதனையை நிகழ்த்த பதினாறு வருடங்கள் எடுத்துக்கொண்டார். 1986இல் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது. கிட்டத்தட்ட 2013 வரையுமே இது முறியடிக்கப்படவில்லை. பதினான்கு மலைகளையும் கடக்க வீரர்கள் பல வருடங்கள் எடுத்துக் கொண்டார்கள்.
‘இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தால் சில மாதங்களிலேயே செய்து காட்டுவேன்’ என்று நிர்மல் புர்ஜா கூறினார். இவர் நேபாளத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். முட்டாள்தனம், செய்யமுடியாது, ஆபத்தில் முடியலாம் என்று இதற்குப் பல்வேறு எதிர் விமர்சனங்கள் வந்தன. இருந்தாலும் ‘புராஜெக்ட் பாசிபிள்’ என்ற பெயரில், தான் நினைத்ததை நடத்திக் காட்டி மலையேற்ற வீரர்களின் ஆதர்ச நாயகன் ஆனார். ஏகப்பட்ட சாதனைகளுக்குச் சொந்தக்காரரான நிர்மல், கடந்த ஜூலை 30ஆம் தேதி ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தார்.
















Add Comment