Home » நா காக்க!
நம் குரல்

நா காக்க!

உதயநிதி ஸ்டா

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை ஒரு நடிகையோடு தொடர்புபடுத்தி அவதூறாகப் பேசிய வழக்கில் திமுகவின் இளைஞரணிச் செயலாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.

ஆகஸ்ட் 3ஆம் தேதியன்று தஞ்சாவூரில் காவிரிப் பிரச்சனை தொடர்பாகத் தமிழக அரசைக் கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பேசிய உதயநிதி முதலமைச்சர் விஜய் குறித்தும், அவரோடு ஒரு நடிகையைத் தொடர்புபடுத்தியும் அவதூறாகப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு தவெகவினரும் மற்றும் பல அரசியல் கட்சியினரும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

இந்த நிலையில், ஆகஸ்ட் 4ஆம் தேதியன்று உதயநிதி ஸ்டாலின் மீது அவதூறுப் பேச்சு, பெண்களின் மாண்பைக் குலைத்தல் உள்ளிட்ட ஒன்பது பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் கைது செய்யப்பட்டு தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்பட்டார்.

உதயநிதி கைது நடவடிக்கைக்கு திமுகவின் முக்கியத் தலைவர்களும், அதிமுக உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கைதை எதிர்த்துத் தமிழகத்தில் திமுகவினர் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!