கடந்த ஒரு மாத ஜந்தர் மந்தர் ஜென் ஸீ எழுச்சிக்குப் பின்னால் மூளாமல் கனன்று கொண்டு இருக்கும் நெருப்பு எது ? முன்பின் தெரியாத அத்தனை பேர் எப்படிக் கூடினார்கள்? அவர்களை ஒன்றாய் இணைத்தது என்ன? வேலைவாய்ப்பு என்று தரவுகள் சொல்கின்றன.
வேலையின் ஏணி போன்ற நீட் தேர்வு சிக்கலில் விழுந்திருப்பது, மேல் தோன்றும் அறிகுறிதான். அவர்கள் திரண்டு எழுந்ததும் அதை ஒரு அடையாளமாய் வைத்து முறையிட மட்டுமே. அடியில் இருக்கும் பிரச்சனை வேறு.
புள்ளியியலில் ஜென் ஸீ என்பவர்கள் 15-29 வயதுக்குள் இருப்பவர்கள். இந்தியாவில் நால்வரில் ஒருவர் ஜென் ஸீ. மொத்தம் 36.7 கோடி. இந்தப் பலத்தால் நம் நாட்டின் சராசரி வயது 28. உலகில் வளர்ந்த நாடுகளின் வயது அதிகம்.
















Add Comment