217. பொற்கோவில் பிரவேசம்
இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை லாகூருக்குக் கடத்திச் சென்ற தீவிரவாதிகள், லாகூர் சென்றடைந்தவுடன் விமானத்தில் இருந்த பயணிகளில் அறுபது பேரை விடுவித்தார்கள். ஆனாலும், விமானத்தின் உள்ளே இன்னமும் பயணிகளும் ஊழியர்களுமாகச் சுமார் நாற்பத்தைந்து பேர் இருந்தார்கள்.
பிந்த்ரன்வாலே மற்றும் அவருடன் கைது செய்யப்பட்ட மற்றவர்களின் விடுதலை, ஐந்து லட்சம் டாலர் ரொக்கம் என்று அவர்கள் பேரம் பண்ணிக் கொண்டிருந்த வேளையில், இந்திய அரசாங்கம் பாகிஸ்தானின் அன்றைய ராணுவ ஆட்சியாளராக இருந்த ஜெனரல் ஜியா உல் ஹக்கைத் தொடர்பு கொண்டு உதவி கோரியது.
ஜெனரல் ஜியாவும் இந்தியாவுக்கு உதவ ஒப்புக் கொண்டு, அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்.
















Add Comment