மாஸ்கோ அமைதியாக இருந்தது
05 – டிசம்பர் – 1989.
திரீஸ்டன்.
முப்பது பேர் கொண்ட கும்பல் வலோத்யாவின் அலுவலகத்துக்கு முன்னால் கூடியது. உள்ளே நுழைந்து எல்லாவற்றையும் உடைத்தெறிய வேண்டுமென்ற வெறியோடு இருந்தார்கள். வலோத்யாவின் மேலதிகாரி மாஸ்கோவுக்கு விடுமுறையில் சென்றிருந்தார். வலோத்யா அவரது பொறுப்பிலிருந்தார்.
வந்திருந்த கும்பலின் நோக்கத்தைப் புரிந்து கொண்டவர், உள்ளிருந்த காவலர்களைத் துப்பாக்கி ஏந்தியபடி ஜன்னல்களில் நிற்கச் சொன்னார். கட்டளை வரும்வரை யாரையும் சுடவேண்டாம் என்று சொல்லிவிட்டு கும்பலை நோக்கி நடந்தார்.
‘இது சோவியத் ராணுவத்தின் அலுவலகம். நீங்கள் நினைப்பதைப் போல கிழக்கு ஜெர்மனியின் ராணுவத்துக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை’ என்றார்.















Add Comment