77 திருப்பம்
மதுரையின் ஆளற்ற தார்ச் சாலையிலிருந்து பார்ப்போருக்கு, காவியில் இருக்கிற தான், கொஞ்சங்கொஞ்சமாய் வெளிப்படவேண்டும் என்று திட்டமிட்டு மணல் முகட்டில் ஏறிப் பின்புறமாய் இறங்க நினைத்தது முள் செடிகளால் கைகூடாமல் போனதற்கு மாறாக, எதிர்பார்ப்பு ஏதுமின்றிப் படிகளில் ஏறிக்கொண்டிருந்தவன் எதிரில், வெள்ளிக் கூரை வேய்ந்ததைப்போல் மாலை வெயிலில் ஜொலித்துகொண்டிருந்த மலைமுகடுகள் திடுப்பெனத் தோன்றியதைக் கண்டு திகைத்து நின்றான்.
தொட்டுவிடலாம் போலக் கைக்கெட்டும் தூரத்தில் இருப்பதாகத் தோற்றமளித்துக் கொண்டிருந்ததுதான் – இரண்டாவது முறை புறப்பட்டபோது ஈரோடு ஏசியிடம் போகப்போவதாகச் சொன்ன இலக்கு; அதுதான் எதிரில் நின்றுகொண்டிருக்கிறது என்பது உள்ளே இறங்கி உட்கார நேரமெடுத்தது. அதுதான் இதுவா. காலண்டர்களில் பார்த்ததைப்போல அச்சு அசலாக அப்படியே இருக்கிறதே என அசட்டுத்தனமாகத் தோன்றியது.
















Add Comment