சிங்கப்பூரின் தேசிய வளர்ச்சித் துறை அமைச்சகம், அந்நாட்டின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் 800 ஹெக்டேர் பரப்பளவில் கடலை தூர்த்து, நிலத்தை உருவாக்கும் திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளது. அதன் மீது மூன்று தனித் தீவுகளும் கட்டமைக்கப்படவுள்ளன. ‘புராஜெக்ட் லாங் ஐலேண்ட்’ என்பது இத்திட்டத்தின்...
Tag - சுற்றுச்சூழல்
கடலோரப் பகுதிகளில் மாசு அதிகரிக்கிறது என்பதற்காக அங்கே குடியிருக்கும் மக்களை இடம் மாற்றச் சொல்கிறது அரசு. காலம் காலமாக வாழ்ந்து வரும் நிலத்தைக் காலிசெய்ய முடியாது என்று மக்கள் அடம்பிடிக்கிறார்கள். மறுத்தால் லட்சக்கணக்கில் அபராதம் கட்டவேண்டும் என்கிறது அரசு. முன்னோர்கள் காலத்திலிருந்து அங்கே வாழ்ந்த...
நீலகிரிக்கும் கொடைக்கானலுக்கும் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு, இந்த ஆண்டும் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்தியுள்ளது தமிழக அரசு. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, கோடை விடுமுறைக் காலத்தில் மட்டும் இந்த நடைமுறை இருக்கிறது. 2025 ஏப்ரல் முதல் ஜூன் வரை செயலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது...
சென்னை துறைமுகத்துக்குச் சமீபத்தில் ஒரு கப்பல் வந்தது. துறைமுகமென்றால் கப்பல் வராமல் கட்டை வண்டியா வரும்? இதெல்லாம் ஒரு விஷயமா என்றால், வந்தது எந்தக் கப்பல், அதன் நோக்கம் என்ன என்பதில் உள்ளது விஷயம். அந்தக் கப்பலின் பெயர், பிளாஸ்டிக் ஒடிசி. உலகம் சுற்றும் கப்பல். ஆனால் சும்மா சுற்றும் கப்பல் அல்ல...
ஏரிகளுக்கும் படகு வீடுகளுக்கும் புகழ்பெற்ற காஷ்மீர் பள்ளத்தாக்கு வறட்சியை எதிர்கொள்கிறது. ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா, அரசின் நீர் மேலாண்மைத் துறையான ஜல் ஷக்தி எடுக்கும் நடவடிக்கைகள் போதாது என்றும் மக்களும் இணைந்து செயல்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். திடீரென நீர் நெருக்கடியை...
துணி துவைப்பதற்குப் போகும் நேரத்தை விட, சலவை இயந்திரத்தினுள் தொலைந்து போன ஒற்றைக் காலுறையைத் தேடுவதற்கு அதிக நேரம் செலவாகும். அது கடைசி வரை கிடைக்காமலே போகவும் வாய்ப்புண்டு. எதற்காக சாக்ஸையெல்லாம் மெஷினில் போட வேண்டும். கையால் அலசினால் கை தேய்ந்தா போய்விடும் என்பார்கள், பெரியவர்கள். ஆனால்...
பெரும்பாலான தென்னாப்பிரிக்க நாடுகள் மழையை மட்டுமே விவசாயத்திற்கு நம்பியிருப்பன. ஒவ்வொரு வருடமும் குறைந்து கொண்டே வந்த மழை, இந்த ஆண்டு வரவே இல்லை. வரலாறு காணாத வறட்சியை அறிவித்திருக்கின்றன மூன்றில் ஒரு பங்கு தென்னாப்பிரிக்க நாடுகள். இயற்கைக்குத் துரோகம் செய்பவை என்னவோ, நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சி...
மழைப் பச்சை என்றொரு நிறம் உண்டு. என்று நனைந்தோம் என்று காய்ந்தோம் என்ற இடைவெளி தெரியாத இலைகளுக்கு மட்டும் சொந்தமான நிறம் இது. இப்படியான மழைக்காட்டில் மட்டுமே வாழும் ஜீவன்களும் தனித்துவம் வாய்ந்தவை. கூரிய மூக்கும், எலி போன்ற உடலும், அணில் போன்ற வாலும் கொண்டு, மரங்களில் வாழும் ட்ரீ ஷ்ரூவ்கள்;...
விருது என்பது ஏதேனுமொரு துறையில் வென்றவர்களுக்கு வழங்கப்படும். எந்தச் செயலுமின்றித் தேமேயென்று இருக்கும் மரங்களுக்கும் விருது வழங்கப்படுவதுண்டு. இங்கல்ல… ஐரோப்பாவில். ‘ட்ரீ ஆஃப் த இயர்’ என்ற பெயரில் ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருதை இவ்வாண்டு போலண்டில் உள்ள பழமையான, பீச் (Beech) என்ற...
டெல்லி உச்ச நீதி மன்றத்தில் நீதிபதி சஞ்சய் கிஷான் கவுல் உள்ளடங்கிய அமர்வு முன்பு டெல்லியின் காற்று மாசு குறித்த விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தது. நவம்பர் பத்தாம் தேதி நடந்த இந்தக் கூட்டத்தில், ‘ஒவ்வொரு வருடமும் இந்த நேரத்தில் பிரச்சினை மோசமடையும் என்று தெரியுமல்லவா? இருந்தும் ஏன் பயனுள்ள...













