இரட்டை உறுப்பினர் பிரச்சினை
காங்கிரஸ் கட்சியின் பல முக்கியத் தலைவர்களும் கட்சியிலிருந்து வெளியேறி மற்ற கட்சிகளில் ஐக்கியமாகிவிட்ட நிலையில், தேர்தலை எதிர்கொள்ள இளைஞர் காங்கிரஸ் கட்சியினரை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்டார் இந்திரா காந்தி.
நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கினார். தொகுதிகள் குறித்த விபரங்கள், அங்குள்ள இளைஞர் காங்கிரஸ் கட்டமைப்பு போன்ற தகவல்களைச் சேகரித்து, அவற்றை நுணுக்கமாக ஆய்வு செய்தார்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மக்கள், பெண்கள், தலித்துகள் ஆகியோரே அவரது இலக்கு எனத் தீர்மானித்துக் கொண்டார். தேர்தல் அறிவிப்பு வரை காத்திராமல், இந்தியா முழுவதும் பயணம் செய்யத் தயாரானார்.
விமானம், ஹெலிகாப்டர், கார் மூலம் பயணம் செய்வதே அவரது திட்டம்.















Add Comment