காசு மேல… காசு வந்து…
மர்க்குலா ஆப்பிளுக்கு வந்த வருடம் 1977. அப்போது ஆப்பிளின் மதிப்பு சில ஆயிரம் டாலர் மட்டுமே.
நான்கு ஆண்டுகளில் ஆப்பிளில் நடந்த மாற்றம் அற்புதம். முன்னெப்போதும் நிகழ்ந்திராதது. எண்பதாம் ஆண்டு முடியும் தருணத்தில் ஆப்பிளின் மதிப்பு கிட்டத்தட்ட இரண்டு பில்லியன் டாலர்.
மில்லியன் அல்ல. பில்லியன். நான்கே ஆண்டுகளில் நிகழ்ந்திருந்தது இந்த மாயம். காரணங்கள் பல.
வாஸ்நியாக்கின் நிகரற்ற பொறியியல் வல்லமை. ஜாப்ஸின் மயக்கும் பேச்சாற்றல். மர்க்குலாவின் வியாபார நுணுக்கங்கள். திறன் வாய்ந்த பொறியாளர்களின் தியாகம்.
இவையனைத்தும் சேர்ந்து ஆப்பிளின் கஜானாவை வேகமாக நிரப்பிக்கொண்டிருந்தது.
செல்வம் எப்போதும் தனியாக வருவதில்லை. அது அழைத்து வரும் சிக்கல்கள் வலி மிகுந்தவை. ஆப்பிளும் இதற்கு விதிவிலக்கல்ல.















“செல்வம் எப்போதும் தனியாக வருவதில்லை.அது அழைத்து வரும் சிக்கல்கள் வலிமிகுந்தவை” -உண்மை.