208. ஆட்சிக் கவிழ்ப்பு
இந்திராவை எதிர்ப்பதற்காக பழைய காங்கிரஸ், ஜன சங்கம், லோக் தளம், சோஷலிஸ்ட் கட்சி, ஜகஜீவன் ராமின் கட்சி (ஜனநாயகத்துக்கான காங்கிரஸ் கட்சி) ஆகிய கட்சிகள் இணைந்து எடுத்த புதிய அவதாரம்தான் ஜனதா கட்சி.
இந்த ஐந்து கட்சிகளில் ஒழுக்கம், கட்டுப்பாடு போன்றவற்றுக்குப் பெயர் பெற்றது ஜன சங்கம். அது கட்டுக்கோப்பான, அர்ப்பணிப்போடு கூடிய தலைவர்களையும் தொண்டர்களையும் கொண்டது. அதற்குக் காரணம் அவர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் உருவாக்கப்பட்டவர்கள் என்பதே.
தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் இந்த ஒழுக்கம், கட்டுப்பாடு, அர்ப்பணிப்பு போன்றவைதான் ஜனதாவின் பிற கோஷ்டிகளுக்கு வேம்பாகக் கசந்தது.
இதைத்தான் அத்வானி, ‘ஜன சங்கத்தினரை ஜனதா கட்சிக்குள்ளே அரசியல் தீண்டத்தகாதவர்கள் போலக் கருதினார்கள்’ என வருத்தப்பட்டுக் குறிப்பிடுகிறார்.















Add Comment