1979ஆம் ஆண்டு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையம் தனியாக உருவாக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 340இன் கீழ் அது அமைக்கப்பட்டது. அதன்படி, சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களது முன்னேற்றத்துக்கான செயல்திட்டங்கள் பரிந்துரைக்கப்படும்.
அச்சமயம் ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி புரிந்தது. பிரதமர் மொரார்ஜி தேசாய் பி. பி. மண்டல் என்பவரை அந்த ஆணையத்தின் தலைவராக நியமித்தார். மண்டல் ஆணையத்துக்கு மிகப்பெரிய சவால் காத்திருந்தது. 1931ஆம் ஆண்டிலிருந்து சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடைபெறவில்லை. எனவே அப்போதிருந்த சாதிவாரியான மக்கள்தொகைத் தரவுகள் காலாவதியாகியிருந்தன.















Add Comment