ஈசனே, என் மகனே என்று மனம் உருகிக் கூக்குரலிட்டபடி வான் நோக்கி அவன் உயர்த்தியபோது வெட்டிய சஞ்சலையின் கீற்றைச் சேமித்திருந்தான்.
உரி
உதுமான், நீ தயாரென்றால் சொல். பூர்ணிமை அன்று வகுப்பைத் தொடங்கலாம். நான் சென்று பாரசீகம் பயின்று வந்திருக்கிறேன் என்று சொன்னார்.
ஈசன் திருவடி அடைந்துவிட்டவருக்கு இந்தப் பிண்டம் எதற்கு? இருக்க இடமளித்த ஈசன் உண்ணச் சோறளிக்க மாட்டானா?
சரியாகக் கவனி. அவன் ஓர் அவாந்தர வெளி. சார்வாகனாகவும் மாயாவியாகவும் மட்டுமல்ல. அவனால் ஒரு சிறந்த சிவபக்தனாகக்கூட இருக்க இயலும்.
எல்லா ஆட்சிகளும் தத்தமது பகைவர்களைத் தன்னகத்தில் கொண்டே அமைகின்றன. நிறைவு காணாத நெஞ்சங்களில் பகை உருவாகிறது.
அச்சத்தில் வாழ்பவனுக்கு அதிகாரம் இறை. அதிகாரம் பெற்றவனுக்கு மனச்சாட்சி இறை. இரண்டுமற்றவனுக்கு இறையென்ற ஒன்றன் அவசியமில்லை.
அபுது, நான் அவனது ஒளி எங்கிருந்து வருகிறதென்று தெரிந்துகொள்வதற்காகவே அவனுக்குள்ளே சென்று பார்த்தேன். ஆனால் அவன் இருளின் சிசு.
பாரதாய தத்தன் அவனை நோக்கி வந்துகொண்டிருந்தான். அவன் உண்மையான தத்தனா, அனுப்பப்பட்ட தத்தனா என்று முதலில் தெரிந்துகொண்டுவிட வேண்டுமென்று நினைத்தேன்.
பேய்களுடன் புழங்குபவனுக்கு அவை காவல் இராதா? உயிரே போகும் தறுவாயிலும் உதவாத பேய்களைக் கொண்டு இவன் எந்தக் கோட்டையைச் சரிக்கத் திட்டமிட்டான்?
உணர்ச்சியைச் சரியாகக் கையாளப் பழகு காளத்தி. அதன் கூர்மை உன் சிந்தையை அகழலாமே தவிரக் குத்திக் கிழித்து உதிரம் சொட்டச் செய்யலாகாது.
ஓர் அல்லும் ஒரு பகலும் நான் உதுமானி நாயனாரின் சிந்தைக்குள் அளைந்து, அங்கே கொட்டிக் கிடந்த அனைத்தையும் தெரிந்துகொண்டேன்.
உதுமானி நாயனாரின் பூட்டன் அப்படி மக்கத்தினின்று நாவாய் ஏறிச் சோழ தேசத்துக்கு வந்தவர்தாம் என்பதை அவரது சிந்தைக்குள் கண்டறிந்தேன்.
சித்தனென்றால் அவனுக்குப் பேய்களின் சகாயம் தேவையில்லை. எப்படிக் கடவுள்களின் சகாயம் தேவையில்லையோ அப்படி.
கூளிகளை வசியம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்கள். ஆறிலொரு வேர் வீரியம் கெட்டதென்றால் அத்தனை முயற்சியும் வியர்த்தமாகும்.
சிவத்தையன்றி இன்னொன்று சிந்தையிலும் தொடவியலாத தாண்டவம் அதுவென்று தோன்றியது. ஆனால் நானறிவேன். அது சிவமல்ல. அதன் வெளிப்படு சக்தி வடிவமுமல்ல.
இறுக்கிப் பிணைத்த கால்களையும் கைகளையும் வைத்துக்கொண்டு உறங்குவது சிரமமான செயல். இங்குமங்கும் திரும்பிப் பார்த்தான். வீதி அடங்கி ஒடுங்கிக் கிடந்தது.
அருமொழியின் ஆட்சியில் ஐயத்தின் பேரில் சிறைப்பிடிக்கப்படுவோருக்குத் தண்டமாக ஆகாரத்துடன் கூடிய கோயில் தொண்டு தரப்படுவதாகக் கேள்வியுற்றேன்.
நிச்சயமாகவே அவன் ஒரு சாமானிய மனிதனல்லன். அதில் எங்கள் யாருக்கும் இரண்டாம் கருத்தில்லை. ஆனால் எந்த விபரீதத்துக்கும் இதுவரை அவன் காரணமாக இருந்ததில்லை.
கடமை என்ற சொல்லில் அனைத்தையும் நியாயத்தின் வட்டத்துக்குள் கொண்டு நிறுத்திவிட முடியும்தான். ஆனால் அதன் உள்ளோடிய கள்ளத்தனத்தை விழிப்புடன் கவனித்தேன்.
மூன்று ஒற்றர்களும் ஒன்றாகப் புறப்பட்டுச் செல்கிறார்கள் என்றால் அதைத் தவிர்ப்பதற்கில்லை. என் கவனத்தைப் பூரணமாக நீலக்கிளியின் சிந்தையில் வைத்தேன்.
நானே ஒரு சார்வாகனாகிவிட்டாற்போல உணர்ந்தேன். அசந்தர்ப்பமாக, செம்புலப் பெயல் நீர் போல நாங்கள் இருவரும் அன்புடை நெஞ்சங்கள் என்று தோன்றியது.
யுகயுகமாக மூட சனக்கூட்டம் பக்தியெனும் போதையில் திளைத்துச் சிந்திக்க மறந்ததனால் செயலற்றுக் கிடக்கிறது. தத்தனே கேள். மரத்த மூளைகளே மன்னர் குலத்தின்...
நீ இருக்கிறாய். எனவே நீ சிந்திக்கிறாய். அல்லது நீ சிந்திக்கிறாய். எனவே நீ இருக்கிறாய். உன் வீடும் உன் ஊரும் விரும்பாதென்று தெரிந்தும் உனக்குத்...
இந்தச் சார்வாகன் பிரபஞ்சத்தையே நிர்மூலமாக்க விரதம் கொண்டிருக்கிறானா? அதன் பொருட்டே அவன் என்னைக் கருதிக் கைப்பற்றப் பார்க்கிறானா?
எனக்கொரு வாயில் திறந்தே தீருமென்று உறுதிபட நினைத்தேன். என் கவனத்தை அவனது சிந்தையிலும் சீலனின் சிந்தையிலும் மாற்றி மாற்றி எடுத்து வைக்கத் தொடங்கினேன்.













