Home » 1867 – 1876: தாது வருடப் பஞ்சம்
இந்தியா200

1867 – 1876: தாது வருடப் பஞ்சம்

1876 முதல் 1878 வரை ‘மாபெரும் இந்தியப் பஞ்சம்’ (The Great Indian Famine) தன் கோரத் தாண்டவத்தை ஆடித் தீர்த்தது. இந்தியர்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்தது. அந்தப் பஞ்சம் மட்டும் மக்களைக் கொல்லவில்லை, ஆங்கிலேய அரசின் சர்வாதிகாரக் கொள்கைகளும் மக்களைக் கொன்றன.

பிரிட்டிஷ் அரசின் கணக்கின்படி ஐம்பத்தைந்து லட்சம் இந்தியர்கள் இப்பஞ்சத்தில் பலியாகினர். ஒரு கோடி பேர் பலியாக்கப்பட்டனர் என்கின்றனர் நவீன ஆய்வாளர்கள். எண்ணிக்கை எதுவாயினும் நினைத்தே பார்க்க முடியாத பேரவலம் அன்றைய இந்தியாவில் அரங்கேறியது என்பதை மறுக்க இயலாது.

இப்பஞ்சத்தில் கொடூரமாகப் பாதிக்கப்பட்டது மதராஸ் மாகாணம். அதனால் இது ‘மாபெரும் மதராஸ் பஞ்சம்’ என்றும் அழைக்கப்பட்டது. உச்சபட்ச பாதிப்பு தாது வருடத்தில் (1877) நிகழ்ந்ததால் இது ‘தாது வருடப் பஞ்சம்’ என்றானது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • Rangarajan says:

    I learned something new today, and I think this could be written more in detail. My understanding was that famine started during world war and from Bengal. May be this is a misconception with many like me. It would have helped if this point was clarified in the article. Was there more famine than one, time for me to claude this.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!