65 தண்டுவடம்
ரேலி ஆரம்பித்தபோது இருந்த மனநிலை போகப்போகக் கொஞ்சம் கொஞ்சமாக இனம்புரியாத வகையில் மாறிக்கொண்டே வருவதைப் பார்க்க இது நாம்தானா என்று வியப்பாக இருந்தது.
தேதி போட்டுக் கொடுக்கப்பட்டிருந்த நிட் இண்டியா பயணக் குறிப்புக் கையேட்டில் மகாராஷ்ட்டிராவின் பாதி வரைதான் எழுதப்பட்டிருந்தது. அதுகூட ஆரம்பத்தில் வெறும் ஊர்ப் பெயர்கள் மட்டும் என இருந்து மெல்ல மெல்ல நிகழ்வுகள் நினைவுகளாகச் சிற்சில வார்த்தைகளில் எழுதப்பட்டு இருந்தன. போகப்போக எழுதுவதே நின்றுவிட்டது. நடப்பதை நினைவுக்காக எழுதிவைப்பதை விட மனத்தில் வாங்கிக்கொள்வதே முக்கியம் என்று தோன்றத்தொடங்கியதில் குறிப்பு எழுதுவதில் அசிரத்தை ஏற்படத் தொடங்கி, விபத்துக்குப் பின் மீண்டும் சைக்கிள் மிதிக்க ஆரம்பித்ததிலிருந்தே எழுதலாம் எழுதலாம் எனத் தள்ளிப்போய்க்கொண்டிருந்தது.
















Add Comment