ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு நோக்கமுண்டு. படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தும் அதை அறிந்திருக்குமென்று எதிர்பார்க்க இயலாது. ஆனால் நம் படைப்பின் நோக்கத்தை நாம் கண்டடைய வேண்டும்.
வேட்டனே. உதிரமல்ல உறவைச் சேர்ப்பது. நமக்கு அது வேறொன்று. பெயரற்றது. விளங்க வாய்ப்பற்ற பெருவெளியில் தோன்றாது மிதந்து செல்லும் மாயத் துகளின் ஒரு முகம் நான். மறு முகம் நீ.
பாறைக்குள் உறையும் சிற்பத்தைக் கொணர வல்லவனுக்குச் சிந்தைக்குள் இருந்து சிவத்தைக் கடைந்தெடுக்க இயலாதென்றா எண்ணிவிட்டார்? நான் எதையும் கைவிடுபவனல்லன். என்னால் தோற்க இயலாது.