பதிமூன்று நாள்களில் ஒரு புத்தகத்தை எழுதி முடித்து வெற்றிகரமாக இந்த ஆண்டை நிறைவு செய்தேன். நான் எழுதுவதற்கென்றே என் வீட்டில் ஓர் அறையை அபகரித்துள்ளேன். மினிமலிசக் கொள்கையோடு திட்டமிட்ட ஆண்டு என்பதால் வெற்றிப் பட்டியல் நீளம் குறைவுதான், ஆனால் நிறைவானது. இரண்டு புனைவற்ற புத்தகங்கள் எழுதுவது. நாவல்...
Tag - மெட்ராஸ் பேப்பர்
ஒருவருடைய படைப்பே அவரது அடையாளமாக மாறிப் போவது சாதாரண விஷயமல்ல. முத்து நெடுமாறன் விஷயத்தில் அது நடந்திருக்கிறது.
மனிதர் கடுப்பானால் இன்ன ரகமாகத்தான் திட்டுவார் என்று சொல்ல முடியாது. சபையில் துகில் உரித்துவிட்டால் என் மானம் ஏரோப்ளேன் ஏறிவிடும்.
இவ்வளவு ஸ்ட்ராங்கான கன்டென்ட் வேண்டாம், கொஞ்சம் லைட்டான விஷயங்களை நிறைய எழுதுங்கள் என்கிற கருத்து தெரிவிக்கப்பட்டது. பல வாரங்களாக எடிட்டோரியல் மீட்டிங்கில் நானும் அதைத்தான் சொல்கிறேன் என வாசகர்களுடன் ஆசிரியர் பாராவும் சேர்ந்துகொண்டார்.
மெட்ராஸ் பேப்பருக்கு இது மூன்றாம் ஆண்டு நிறைவிதழ். தமிழ்ச் சூழலில் இன்றெல்லாம் மூன்று ஆண்டுகள் ஓர் இணையப் பத்திரிகையை இடைவெளியின்றி நடத்துவது என்பது கிட்டத்தட்ட மாய யதார்த்தம். அதுவும் வார இதழ். மெட்ராஸ் பேப்பருக்கு அது சாத்தியமானதற்கு வாசகராகிய நீங்கள் மட்டுமே காரணம். இந்தப் பத்திரிகையின் மீது...
இந்த வருடத்தின் முதல் நாளே கொண்டாட்டத்தோடு தொடங்கியது. புதிய தலைமுறை டிஜிடல் இதழில் என்னுடைய குறுநாவல் ‘சக்ரவியூஹம்’ ஜனவரி ஒன்றாம் தேதி முதல் வெளிவந்தது. பல புதிய வாசகர்கள், தீவிர விமர்சனங்கள் எனப் பல புதிய திறப்புக்களைக் கொடுத்தது. பிரபலமான ஓர் ஊடகத்தில் எழுதுவதன் பலனை நன்கு புரியவைத்தது...
2024 ஆம் ஆண்டினை நாம் துபாயில் துபாய் ஃபிரேம் கட்டடத்தின் முன்னால் நின்று வாண வேடிக்கைகளை ரசித்துக் கொண்டு வரவேற்றோம். இங்கிலாந்தில் வாண வேடிக்கைகளைப் பார்க்கும் ஆர்வம் இருந்தாலும் சில மணி நேரங்கள் குளிரில் நடுங்கிக் கொண்டு பார்க்குமளவுக்கு ஆர்வமில்லை. அதனால் இவ்வாண்டு துபாய் சென்ற போது வாண...
2024ஆம் ஆண்டறிக்கையைப் புத்தக வாசிப்பிலிருந்து தொடங்குவோம். இந்த ஆண்டு நான் வாசித்தது குறைவு. ஆனாலும் மனக்குறை இல்லை. காரணம், படித்ததில் பெரும்பாலானவை க்ளாஸிக் வகைப் புத்தகங்கள். காகங்கள் (சிறுகதைகள் 1950-2000, சுந்தர ராமசாமி. அசோகமித்திரன் சிறுகதைகள் (தொகுதி 1), ஒரு யோகியின் சரிதம், தமிழ் அறிவோம்...
புத்தகக் காட்சி சீக்கிரம் ஆரம்பித்தால் போதும் எனத் தோன்றத் தொடங்கிவிட்டது. புக்ஃபேர் தொடங்கிவிட்டால் இந்த ‘கல்லாப்பெட்டி சிங்காரம்’ வேலைக்குக் கல்தா கொடுத்துவிட்டு, சக்கரம் நாவலை எழுத உட்கார்ந்துவிடலாம். எனக்கு ஆயுசு 55லிருந்து 60 என்று 23 வயதிலிருந்தே ஜாதகம் கைரேகை என எல்லாவற்றிலும் சொல்லிக்...
எழுத்து என்ற உலகத்தைக் கண்டுபிடித்து, அதில் என் பெயரில் ஒரு பிள்ளையார் சுழி போட்டதுதான் 2024இல் என் மிகப்பெரிய வெற்றி. யாருமில்லா கடையில் டீ ஆற்றுவது போல், சரமாரியாக நாற்பது சிறுகதைகள் எழுதி, செய்வதறியாது ரகசியமாகப் பேணிக் காத்தேன். தேநீரை ருசிக்க ஒரு தளத்தையும், அதனை விமர்சனம் செய்ய ஒரு குழுவையும்...














