அக்கணம் எனக்கு உண்டான பரவசத்துக்கு நிகரென்று ஒன்றைச் சொல்லவே முடியாது. எத்தனை தீர்க்கமான திட்டம்! கருவூர்ச் சித்தர் சிந்தையால் எட்டித் தொடவியலாத மனிதரென்று எண்ணிக்கொண்டேன்.
நான் தோற்கப் போவதில்லை. அது இங்குதான் உள்ளது. இந்தப் படித்துறைதான். ஏதோ ஒன்று மறைக்கிறது. அல்லது ஏதோ ஒன்றைத் தவறவிடுகிறேன். என்னவென்று அறியாமல் விடுவதில்லை.