ஐயனே, நான் கல்வியற்றவன். வாதம் என் இயல்பல்ல. தவிர உங்களை வாதிட்டு வெல்லும் உத்தேசமும் அற்றவன். உமது இயலுக்குள் என்னால் பொருந்த இயலாது. என்னை என் வழியில் விட்டுவிடுங்கள்.
நேரிடை எண்ணமும் மனித குலத்தின் மீது பற்றும் உள்ள நீங்கள் உங்கள் கலையைக் கொண்டு மக்களுக்கு நல்லனவற்றைச் செய்துகொண்டே இருக்க முடியுமானால் மன்னர்கள் எதற்கு?