‘மேடம், ஓடிபி சொல்லுங்க.’ கீச்சுக்குரலில் கேட்ட இரகசிய எண்களைத் தடதடவென்று மொபைலில் தட்டியதும், மந்திரம் போட்டாற்போல் ஒரு வரைபடம் விரிந்தது. நகரம் கட்டங்களாகப் பரந்து கிடக்க, அதனூடாக ஒரு கோடு நீண்டு, வளைந்து இலக்கைத் தொட்டது. அடுத்த சில நிமிடங்களுக்கு அந்தக் கோட்டை ஒழுங்காகப்...
Tag - சிறுகதை
மணி மூன்று பதினான்கு. அலாரம் இன்னும் அடிக்கவில்லை. அதற்கு முன்பே விழிப்பு வந்துவிடுகிறது. உடல் சில இரவுகளைத் தானாகவே வெட்டி எறிந்துவிடுகிறது. எந்த நொடியிலிருந்து தூக்கம் பயனற்றதாக மாறுகிறது என்பதை அது தனியாகத் தீர்மானித்துவிடுகிறது. மேலே விசிறி சுழன்றுகொண்டிருந்தது. உஷ். உஷ். உஷ். டக். ஒவ்வொரு...
பூக்காலம். குளிர்ந்த காலைக் காற்று சோம்பலூட்டியது. சோல் மாநகர் தன் வளர்ச்சியின் மந்திரத்துடன் அந்நாளையும் தொடங்கியிருந்தது. அது ‘ப்பள்ளி ப்பள்ளி’. அதற்கு மாறாக அவள் தன் ஆய்வகத்துக்கு மெதுவாக நடந்தாள். குவானாக் மலைச்சரிவில் அமைந்த நக்சொங்தே மலையூடு வழி. ஓர் அரைவட்ட வடிவக் குகை. அதன் ஊடே...
சந்திரசேகர் அந்த அரங்கில் நுழைந்த உடனேயே அவன் கண்கள் வலதுபுறம் நோக்கித் திரும்பின. நீண்ட மேஜை. அதன் மேல் மூன்று காலி எவர்சில்வர் பாத்திரங்கள். கொஞ்சம் தேங்காய் சட்னி ஒட்டிக்கொண்டிருந்த பெரிய கண்ணாடிக் கிண்ணம். வெள்ளை வெளேர் என்று இருந்த மேஜை விரிப்பில் அங்கங்கு சாம்பார் திட்டுகளாகக் காய்ந்திருந்தது...
செய்யாத குற்றத்துக்குச் சிறையில் அடைக்கப்பட்டு ஒவ்வொரு நொடியிலும் மரணத்தை எதிர்நோக்கியிருந்த அனுபவமுண்டா உங்களுக்கு? இல்லையென்றால் என்னிடம் கேளுங்கள், நான் சொல்கிறேன். இப்போது நான் சிறையில் இருக்கிறேன். அதிசயம் எதுவும் நிகழ்ந்தாலொழிய சிறிது நேரத்தில் எனக்குத் தண்டனை நிச்சயம். மரணதண்டனை. நான்...
கார் இன்ஜின் இயங்கத் தொடங்கிய சத்தம் கேட்டதும் மொட்டை மாடியில் நின்று கவனித்துக் கொண்டிருந்த நான், முச்சந்தியில் தயாராக நின்ற கூட்டாளியை நோக்கி சைகை செய்தேன். ‘நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்பது போல அவன் பதில் சைகை செய்தான். கார் முச்சந்தியைக் கடந்து சிறிது தூரம் சென்றதும் அவன்...
மதிய உணவு முடித்து வேலை மும்முரத்தில் இருந்தபோது, தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. யாராவது கடன்காரனாக இருக்கும் என்று நினைத்து, அதைத் துண்டித்துவிட்டு வேலையைத் தொடர்ந்தேன். மீண்டும் அதே எண்ணிலிருந்து அழைப்பு. யாராக இருக்கும் என்றெண்ணி சற்று எரிச்சலோடு ‘ஹலோ’ என்றேன். யாரோ இந்தியில்...
அத்தையை வழியனுப்பி விட்டு இதோ கூடத்தை அலம்பித் தள்ளியாகிவிட்டது. நினைவுகளையும் கூட இப்படி அடித்து நீர் ஊற்றி அலம்பிவிட முடிந்தால் நன்றாக இருக்கும்.














